தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து பலாத்காரம் : சைக்கோ இளைஞரை போலீசில் ஒப்படைத்த மக்கள்

ஓமலூர் அருகே தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த இளைஞரை, பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து பலாத்காரம் : சைக்கோ இளைஞரை போலீசில் ஒப்படைத்த மக்கள்
x
ஓமலூர் அருகேயுள்ள கருத்தானூரை சேர்ந்தவர் கட்டட கூலி தொழிலாளி ஜெயபிரகாஷ். இவர், பொது கழிப்பிடத்திற்கு சென்ற அப்பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை  பின் தொடர்ந்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த இளைஞரை பிடித்து தர்ம அடிகொடுத்த அப்பகுதிமக்கள், ஓமலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார், சைக்கோ இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனியாக இருக்கும் பெண்களை மடக்கி பாலியல் வன்கொடுமை செய்வதை அந்த இளைஞர் வழக்கமாக கொண்டிருந்ததும், இதுவரை பத்துக்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.

Next Story

மேலும் செய்திகள்