பனிப்பொழிவு அதிகரிப்பால் மல்லிகைப் பூ விலை உயர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் மல்லிகைப்பூ விளைச்சல் குறைந்துள்ளது.
பனிப்பொழிவு அதிகரிப்பால் மல்லிகைப் பூ விலை உயர்வு
x
கன்னியாகுமரி மாவட்டத்தில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் மல்லிகைப்பூ விளைச்சல் குறைந்துள்ளது. இதனா​ல் தோவாளை சந்தையில் பூக்களின் விலை 
மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 500 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகைப் பூ, தற்போது இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல், நானூறு ரூபாய்க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ தற்போது 800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மகர ஜோதி, பொங்கல் என விழாக்காலம் நெருங்கி வரும் நிலையில் பூக்களின் விலை மேலும் உயருவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் வியாபாரிகள்  தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்