எச்.ஐ.வி ரத்தம் : குற்ற உணர்ச்சியால் உயிரிழந்த இளைஞர்

கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தத்தை தானமாக வழங்கியதால், தற்கொலைக்கு முயன்ற இளைஞர் மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
x
சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அந்த பெண்ணுக்கு ரத்த தானம் அளித்த கமுதி பகுதியை சேர்ந்த இளைஞர் மனஉளச்சல் காரணமாக விஷம் அருந்திய நிலையில் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . அவருக்கு தீவிர சிசைச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை உயிரிழந்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மதுரை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சண்முக சுந்தரம், விஷத்தின் வீரியம் அதிகமாக இருந்த காரணத்தால் இளைஞரை காப்பாற்ற முடியவில்லை என தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்