காலை மிதித்ததற்கு மன்னிப்பு கேட்காததால் கத்தியால் குத்தப்பட்டு இளைஞர் கொலை

காலை மிதித்ததற்கு மன்னிப்பு கேட்காததால் கத்தியால் குத்தப்பட்டு இளைஞர் கொலை
காலை மிதித்ததற்கு மன்னிப்பு கேட்காததால் கத்தியால் குத்தப்பட்டு இளைஞர் கொலை
x
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே, காலை மிதித்ததற்கு மன்னிப்பு கேட்காத ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். கோட்டைக்காடு பகுதியில் பொன்னர் சங்கர் என்ற தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது. இதனை பார்த்து கொண்டிருந்த பாபு என்பவரது காலை, கார்த்தி என்பவர் மிதித்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில், கார்த்தியை, பாபு கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த பள்ளிப்பாளையம் போலீசார், சரணடைந்த பாபுவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்