செலவுக்கு பணம் தராததால் தந்தையை கொலை செய்த மகன்
தந்தை தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த கீழ்ராவந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர்.விவசாயி சுந்தரராமன். இவரது மகன் விக்னேஷ்.
வேலைக்கு செல்லாமல் சுற்றித் திரிந்த விக்னேஷ், அடிக்கடி பணம் கேட்டு தந்தையை தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இதேபோல, நேற்று மாலை வாக்குவாதம் முற்றியதால், ஆத்திரமடைந்த விக்னேஷ்,தந்தை சுந்தரராமனின் தலையில் கல்லை போட்டு கொன்றுள்ளான்.இதுகுறித்து தகவல் அறிந்த தண்டராம்பட்டு போலீசார், தந்தையை கொலை செய்த விக்னேஷை கைது செய்து,விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story