ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா : எரியும் விளக்குடன் பெண்கள் ஊர்வலம்

குன்னூர் ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
x
குன்னூர்  ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.  செண்டை மேளம் முழங்க, புலிவாகனத்தில் ஐயப்பன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண்கள்  மற்றும் குழந்தைகள் எரியும் விளக்குடன் ஊர்வலம் வந்தனர். காளி,ஆஞ்சநேயர்,சிவன் மற்றம் அன்னலஷ்மி வேடம் அணிந்து, பக்தர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.

மார்கழி மாத திருவிளக்கு பூஜை : கையில் விளக்குகளை ஏந்தி பெண்கள் ஊர்வலம்

பொன்னேரி அருகே திருவேங்கடபுரம் ஸ்ரீகருமாரியம்மன் ஆலயத்தில் மார்கழி மாத திருவிளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 38 ஆவது ஆண்டாக நடைபெறும் திருவிளக்கு பூஜையில் திருவேங்கடபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் கையில் விளக்குகளை ஏந்தி, பொன்னியம்மன் ஆலயம் வரை ஊர்வலமாக சென்றனர். மலர் அலங்கார வாகனத்தில் ஐயப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியின்போது நடைபெற்ற வானவேடிக்கை பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. 

Next Story

மேலும் செய்திகள்