கிணற்றில் தவறி விழுந்த இருவரின் உடல்கள் மீட்பு

கோவை மாவட்டம் சின்னத்தடாகத்தை அடுத்த வீரபாண்டியில் கிணற்றில் லாரி விழுந்த சம்பவத்தில் 2-நாள் போராட்டத்துக்கு பின் இரு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
கிணற்றில் தவறி விழுந்த இருவரின் உடல்கள் மீட்பு
x
கோவை மாவட்டம் சின்னத்தடாகத்தை அடுத்த வீரபாண்டியில் கிணற்றில் லாரி விழுந்த சம்பவத்தில் 2-நாள் போராட்டத்துக்கு பின் இரு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொழிலாளர்களுடன் செங்கல் சூளைக்கு வந்த டிப்பர் லாரி, நிலை தடுமாறி 200 அடி ஆள கிணற்றுக்குள் விழுந்தது. இதில், மணி என்பவர் உயிருடன் மீட்கப்பட்டார். மதியம் ஒரு மணி அளவில் கிரேன் மூலம் டிப்பர் லாரி மேலே தூக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தேடியதில் மூழ்கிய இருவரும் இறந்த நிலையில் மீட்கப்பட்டனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்