உண்ணாவிரதத்தில் மயங்கி விழுந்த 16 ஆசிரியர்கள்...

சம்பள முரண்பாடுகளை களையக் கோரி, சென்னையில் இடை நிலை ஆசிரியர்கள் 2 - வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
x
சம்பள முரண்பாடுகளை களையக் கோரி, சென்னையில் இடை நிலை ஆசிரியர்கள் 2 - வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர் - ஆசிரியைகள், எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். போலீசார் கொடுத்த உணவை வாங் மறுத்த இடை நிலை ஆசிரியர்கள், தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது, மயக்கம் அடைந்த  இடைநிலை ஆசிரியர்களில் 16 பேர்  மீட்கப்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை, போராட்டம் நீடிக்கும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். காவல்துறையினர் வெளியேறுமாறு கூறியதை தொடர்ந்து, தற்போது அவர்கள் டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்