நோய்களை குணப்படுத்துமா கழுதைப் பால் ? - கூவி, கூவி விற்கும் பெரம்பலூர் பெண்மணி

திருச்சியில் நோய்களை தீர்ப்பதாக கூறி, பெரம்பலூரை சேர்ந்த பெண் கழுதைப்பாலை விற்று வருகிறார்.
x
திருச்சி லால்குடி அருகே உள்ள சுற்றுவட்டார கிராமங்களுக்கு கழுதை மற்றும் கழுதை குட்டியுடன் வீதிகளில் உலா வரும் பெரம்பலூரை சேர்ந்த பச்சையம்மாள் என்ற பெண், வீடு வீடாக சென்று கழுதைப் பாலை  விற்று வருகிறார். ஒரு சங்கு
கழுதைப் பால், 50 ரூபாய் என்று விற்பனை செய்யும் இவர், கடந்த பத்து ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இவ்வாறு கழுதைப் பாலை விற்று வருவதாக கூறுகிறார். இவரிடம் கழுதைப் பாலை ஆர்வமாக வாங்கி குடிக்கும் மக்களின் செயல் வியக்கத்தக்க நிகழ்வாக திகழ்கிறது.

Next Story

மேலும் செய்திகள்