ஸ்ரீரங்கத்தில் திருக்கைத்தலசேவை : ஏராளமானோர் சுவாமி தரிசனம்

நம்மாழ்வாருக்கு காட்சியளிக்கும் பொருட்டு நம்பெருமாள் நின்றகோலத்தில் காட்சியளித்ததை உணர்த்தும் வகையில், திருக்கைத்தல சேவை ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் நடைபெற்றது.
ஸ்ரீரங்கத்தில் திருக்கைத்தலசேவை : ஏராளமானோர் சுவாமி தரிசனம்
x
நம்மாழ்வார் பராங்குச நாயகி திருக்கோலத்தில் எழுந்தருள, திருமாமணி மண்டபத்தில் நம்பெருமாளை கோயில் பட்டர்கள் தங்களது இரு கைகளிலும் ஏந்தியபடி  பக்தர்களுக்கு சேவை சாதிக்க செய்தனர். ஆண்டுக்கு ஒரு முறை ஸ்ரீரங்கத்தில் மட்டுமே இந்த சேவை நடைபெறுகிறது என்பதால் ஆயிரங்கால் மண்டபத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா, ரங்கா என பக்தி முழக்கமிட்டவாறு நம்பெருமாளை சேவித்தனர். 

ஸ்ரீனிவாச பெருமாள் - பத்மாவதி தாயார் திருக்கல்யாணம் 

ஒசூர் அருகே கர்நாடகா மாநில எல்லையில் சர்ஜாபுரம் என்ற இடத்தில் ஸ்ரீனிவாச பெருமாளுக்கும் பத்மாவதி தாயாருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக திருப்பதியிலிருந்து ஸ்ரீனிவாச பெருமாள் மற்றும் பத்மாவதி தாயாரின் உற்சவங்கள் எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனைத்தொடர்ந்து  ஸ்ரீனிவாச பெருமாளுக்கும் பத்மாவதி தாயாருக்கும் வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடைபெற்றது.  

Next Story

மேலும் செய்திகள்