விலங்குகளை வேட்டையாடி ஓட்டல்களுக்கு விற்பனை செய்த 3 பேருக்கு சிறை

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த மூன்று இளைஞர்களை மடக்கி பிடித்தனர்.
விலங்குகளை வேட்டையாடி ஓட்டல்களுக்கு விற்பனை செய்த 3 பேருக்கு சிறை
x
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த மூன்று இளைஞர்களை மடக்கி பிடித்தனர். காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்ததில், நெசவு தொழில் செய்துவரும் அவர்கள் இரவு நேரத்தில் வன விலங்குகளையும், பறவைகளையும் வேட்டையாடி, அவற்றை தனியார் ஓட்டல்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதனை அடுத்து அவர்களிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார், மேட்டூர் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்