வேதா நிலையத்தை நினைவிடமாக மாற்றலாம் - மதிப்பீட்டு குழு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மட்டுமே மாற்ற வேண்டும் என பொதுமக்கள் தெரிவி்த்துள்ளதாக, சமூக தாக்க மதிப்பீட்டு குழு தெரிவித்துள்ளது.
வேதா நிலையத்தை நினைவிடமாக மாற்றலாம் - மதிப்பீட்டு குழு
x
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவிடமாக மாற்றுவதால் ஏற்படும் சமூக தாக்கம் குறித்து அறிய, 

* பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம், டிசம்பர் 8ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. 

* இதனையடுத்து பொதுமக்களின் கருத்துக்கள் அடங்கிய விரிவான திட்ட அறிக்கையை தயாரித்த சமூக தாக்க மதிப்பீட்டு குழு, அதை அரசிடம் சமர்பித்தது.

* அதில், பூட்டப்பட்டு கவனிப்பின்றி உள்ள வேதா நிலையத்தை தமிழக அரசு உரிய மரியாதையுடன் நினைவிடமாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர் என்றும்,

* நினைவிடத்தோடு பெண்கள் ஆளுமைக்கான திட்டங்களையும் செயல்படுத்த வேதா நிலையத்தை பயன்படுத்தலாம்  எனவும்,

* நினைவிடமாக மாற்றுவதற்கு பதிலாக வேறு எதாவது சமூக திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என்றும் பலர் கருத்து தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து சமூக தாக்க மதிப்பீட்டு குழு வெளியிட்ட அறிக்கையில்  

* வேதா நிலையத்தில் எந்த ஒரு நபரும் வசிக்காத காரணத்தால் குடும்பங்கள் இடம் பெயருதல் என்ற பிரச்னைக்கு இடமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மேலும் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதால் பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்காது எனவும் 

* குழுவின் ஆய்வின் படி சமூகத் தாக்கம் என்பதற்கு இடமும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

* இத்திட்டத்தால் மாசு மற்றும் மாசுபாடு உள்ளிட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு தேவை இல்லை எனவும் ஏற்கனவே நில எடுப்பு செய்யப்பட்டுள்ளதால் உபரியாக காலியிடம் எதுவும் இல்லை என்றும் மதிப்பீட்டு குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது

* மறைந்த முதலமைச்சரின் இல்லத்தை தவிர வேறு இடத்தினை நினைவு இல்லமாக மாற்றுவது இதுவரை பின்பற்றி வந்த முறைகளுக்கு மாறாக அமையும் எனவும் அந்த அறிக்கையில் மதிப்பீட்டு குழு தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்