ரேஷன் கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் - செல்லூர் ராஜூ

ரேஷன் கடைகளில் முறைகேடுகளை களைய கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
x
ரேஷன் கடைகளில் முறைகேடுகளை களைய கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செல்லூர்  ராஜூ தெரிவித்தார். மதுரை மாவட்டம் துவரிமான் பகுதியில் மகளிர் சுகாதார வளாகம் பூஜையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசுகையில், ரேஷன் கடைகளில் முறைகேடுகளை முழுமையாக களைய நடவடிக்கை  எடுக்கப்படும் எனவும், அவ்வாறு நடப்பது உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்