குறைபாடுகள் இருந்த கருவை வளரவிட்ட மருத்துவர் : சித்ரவதையை அனுபவித்த இளம்பெண் புகார்

குறைபாடுகள் இருந்த கருவை வளரவிட்ட மருத்துவர் உரிய பதிலளிக்க வேண்டும் என நெல்லையில் இளம்பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
குறைபாடுகள் இருந்த கருவை வளரவிட்ட மருத்துவர் : சித்ரவதையை அனுபவித்த இளம்பெண் புகார்
x
சங்கரன்கோவிலை சேர்ந்த பொன்செல்வி, தமது வயிற்றில் உள்ள கரு குறித்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்துள்ளார். ஸ்கேன் மூலம் குழந்தை ஆரோக்கியத்துடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. உடல் உபாதையால், நெல்லை அரசு மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு, 14 குறைபாடுகளுடன் குழந்தை பிறந்து இறந்துள்ளது. கருவின் குறைபாடுகள் குறித்து தெரிவிக்காதது குறித்து ஏற்கனவே சிகிச்சைபெற்ற தனியார் மருத்துவமனை முன் நின்று கேள்வி எழுப்பினார். ஆனால் அவரை உதாசினப்படுத்திய மருத்துவர், முடிந்ததைத் பார்த்துக்கொள் என கூறி வெளியேற்றதாக பொன்செல்வி கதறி அழுதது அங்கிருந்த மற்ற கர்ப்பிணிகளும் அச்சத்தில் உறைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்