ஷவரில் குளித்து மகிழும் யானைகள்...

மேட்டுப்பாளையம் சிறப்பு நலவாழ்வு முகாமில் பங்கேற்றுள்ள யானைகள் ஷவரில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தன.
x
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த 14 ந்தேதி  தொடங்கியது. அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்முகாமில் கோயில் மற்றும் திருமடங்களை சேர்ந்த 28 யானைகள் பங்கேற்றுள்ளன. சமச்சீர் உணவு மற்றும் பசுந்தீவனங்கள் யானைகளுக்கு வழங்கப்படுகின்றன. நடைபயிற்சிக்கு பின் யானைகள் ஆற்றின் கரையோரம் அமைக்கப்பட்டுள்ள ஷவர் மேடையில் யானைகள் ஆனந்தமாக குளித்து மகிழ்கின்றன. 

Next Story

மேலும் செய்திகள்