ஆணையத்தில் ஆஜரான கொடநாடு எஸ்டேட் முன்னாள் உரிமையாளர்

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் கொடநாடு எஸ்டேட்டின், முன்னாள் உரிமையாளர் பீட்டர் ஜோன்ஸ், நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
ஆணையத்தில் ஆஜரான கொடநாடு எஸ்டேட் முன்னாள்  உரிமையாளர்
x
கொடநாடு சொத்து விபரங்கள் குறித்து ஆணையம், கேள்வி எழுப்பியது.  சசிகலா தரப்பு தம்மை மிரட்டி, கொட நாடு எஸ்டேட்டை 7 கோடி ரூபாய்க்கு வாங்கியதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் பேட்டியளித்திருந்தார். இந்நிலையில், கொடநாடு எஸ்டேட் தொடர்பாக முன்னாள் உரிமையாளர் பீட்டர் ஜோன்ஸ் ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பியது. இதை தொடர்ந்து ஆணையத்தில் இன்று பீட்டர் ஜோன்ஸ் ஆஜரானார். அப்போது, கொடநாடு சொத்து யாருடைய பெயரில் பத்திரபதிவு செய்யப்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு  பீட்டர் ஜோன்ஸ் பதில் அளித்தாக ஆறுமுகசாமி ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்