கந்துவட்டி கொடுமையால் விரக்தி : விவசாயி தூக்கு போட்டு தற்கொலை

தேனி மாவட்டம் போடி அருகே ராசிங்காபுரத்தை சேர்ந்த சதிஷ்குமார் என்ற விவசாயி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கந்துவட்டி கொடுமையால் விரக்தி : விவசாயி தூக்கு போட்டு தற்கொலை
x
தேனி மாவட்டம் போடி அருகே ராசிங்காபுரத்தை சேர்ந்த சதிஷ்குமார் என்ற விவசாயி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கேரளாவில் ஏலக்காய் தோட்டம் வைத்திருந்த அவர், இராசிங்காபுரத்தை சேர்ந்த மதியழகன் உள்ளிட்ட இருவரிடம் 3 லட்சம் ரூபாய் கடனாக பெற்றதாகவும், அவர்கள் அதிக வட்டி கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. கந்துவட்டி பிரச்சனையால் மனமுடைந்த சதிஷ்குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து அவரின் உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்