அறுவடைக்கு தயார் நிலையில் இருக்கும் பொங்கல் கரும்புகள்...

பொங்கல் கரும்புக்கு கூடுதல் விலை கிடைத்தால் வாழ்வாதாரம் மீளும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
x
தஞ்சை மாவட்டம்,  சூரக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி, திருவிடைமருதூர், அம்மாப்பேட்டை உள்ளிட்ட  பகுதிகளில் அதிக அளவில் செங்கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் புயலால் சாய்ந்த கரும்புகளை நிமிர்த்தி கட்டி, ஏக்கருக்கு கூடுதலாக 20 ஆயிரம் ரூபாய் கூடுதலாக செலவிட்டுள்ள விவசாயிகள், பொங்கல் விற்பனையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். பொங்கல் கரும்புக்கு கூடுதல் விலை கிடைக்கும் பட்சத்தில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் வாழ்வாதாரம் கொஞ்சமாவது அதில் இருந்து மீளும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்