தரகர்களுக்காக நள்ளிரவிலும் இயங்கும் பத்திரப்பதிவு அலுவலகம் : திருவெறும்பூர் மக்கள் புகார்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வின் நகரில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகத்தில் நிலத்தரகர்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தரகர்களுக்காக நள்ளிரவிலும் இயங்கும் பத்திரப்பதிவு அலுவலகம் : திருவெறும்பூர் மக்கள் புகார்
x
 திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வின் நகரில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகத்தில் நிலத்தரகர்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தரகர்கள் உதவி இல்லாமல் பத்திர பதிவுக்கு செல்பவர்கள் அலைகழிக்கப்படுவதாகவும்,  சார் பதிவாளர் ஆனந்தராஜின் அலட்சிய போக்கால் அலுவலக நேரங்களில் பத்திர பதிவு செய்வதில் அலுவலக ஊழியர்கள் மிகவும் மந்தமாக பணி செய்து வருவதாகவும் பொது மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.இடைத்தரகர்களின் உதவியோடு தான் பத்திர பதிவு செய்யும் சூழல் உள்ளதாகவும், இரவு 10 மணிக்கு மேல் நள்ளிரவு ஒரு மணி வரையிலும் அதிவேகத்தில் பத்திர பதிவு செய்யப்படுவதாகவும் பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவும் 10.30 மணிக்கு சார்பதிவாளர் ஆனந்தராஜ் உட்பட 4 ஊழியர்கள் பத்திர பதிவு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்ததாகவும், இதனை கேட்டவர்களை சார்பதிவாளர் ஆனந்தராஜ் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்