மாற்று திறனாளிகளுக்கான சுயம்வரம் : 6 ஜோடிகளுக்கு ஒரே மேடையில் திருமணம்
தூத்துக்குடி சில்வர்புரத்தில் உள்ள லூசியா இல்லத்தில் மாற்று திறனாளிகளுக்கான சுயம்வரம் நடைபெற்றது.
தூத்துக்குடி சில்வர்புரத்தில் உள்ள லூசியா இல்லத்தில் மாற்று திறனாளிகளுக்கான சுயம்வரம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 52 மாற்று திறனாளிகள் கலந்து கொண்டனர். அவர்களில் தங்களது துணையை தேர்ந்தெடுத்த 6 ஜோடிகளுக்கு ஒரே மேடையில் திருமணம் நடைபெற்றது. தாலி, உடைகள், தேவையான சீர்வரிசை பாத்திரங்கள், சமையல் பொருட்கள் மணமக்களுக்கு பரிசாக வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
Next Story