தனியார் கல்லூரி பேருந்தை இரும்பு கடையில் விற்ற பலே திருடர்கள்

நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் தனியார் கல்லூரி பேருந்தை மர்ம நபர்கள் கடத்தி சென்று, இரும்பு கடையில் விற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் கல்லூரி பேருந்தை இரும்பு கடையில் விற்ற பலே திருடர்கள்
x
ஆலங்குளத்தை சேர்ந்த காமராஜ் என்பவர் தென்காசியில் உள்ள தனியார் கல்லூரியில் பேருந்து ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் கடந்த வெள்ளி கிழமை ஆலங்குளம் பேருந்து நிலையம் மேல்புறத்தில் பேருந்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். திங்கள் கிழமை வந்து பார்த்த போது பேருந்து காணாமல் போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுனர் கல்லூரி நிர்வாகத்திடமும் காவல்துறையினரிடமும் புகார் அளித்தார்.

போலீஸார் வாகனத்தில் பொருத்தப்பட்ட ஜீ.பி.எஸ் கருவி மூலம்  விசாரணை நடத்தியதில்,  பேருந்து பழைய இரும்பு கடையில் விற்கப்பட்டது தெரியவந்தது.

இரும்பு கடை  உரிமையாளரிடம் நடத்திய விசாரணையில்,   5 பேர் கொண்ட கும்பல்  வாகனத்தை விற்பனை செய்தது தெரிய வந்தது. போலீசார் இது தொடர்பாக 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்