வரவேற்பு பேனரால் பாதியில் நின்னு போன கல்யாணம்...

ஆரணி அருகே வரவேற்பு பேனர் வைத்தது தொடர்பாக எழுந்த பிரச்சினையில் தகராறு முற்றி திருமணம் நின்று போன நிகழ்வு திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரவேற்பு பேனரால் பாதியில் நின்னு போன கல்யாணம்...
x
வேல் திரைப்படத்தில் இடம்பெறும் ஒரு காக்கா ஆய் போனதுக்கு இம்புட்டு கலவரமா என்ற வடிவேலுவின் காமெடி தெள்ளூர் கிராமத்தில் டிராஜிடியில் முடிந்துள்ளது. திருமண மண்டபம் அருகே வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பேனரால் ஏற்பட்ட வம்பில் திமுக முன்னாள் நிர்வாகி ராஜகோபால் மகள் சந்தியாவின் திருமணம் நின்று போனது. பேனரால் ஏற்பட்ட வாய் தகராறு, மோதலாக மாறி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த மணமகன் சண்முகம் வீட்டார், மண்டபத்தில் இருந்து வெளியேறினார். திகைத்து போன மணப்பெண் வீட்டார் எப்படியும் திருமணத்தை நடத்தியே ஆக வேண்டும் என எண்ணினர். இதனை தொடர்ந்து, அருகிலுள்ள கோயில் ஒன்றில் உறவினருடன் சந்தியாவுக்கு திருமணம் நடத்தப்பட்டது. வரவேற்பு பேனர் சண்டையால் தாலி கட்டும் நேரத்தில் திருமணம் நின்று போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்