டிச.16 - ல் சபரிமலை தீர்ப்பு குறித்துஆலோசனை

சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து ஆலோசிப்பதற்காக,சென்னையில், 'அய்யப்ப குருசாமிகள் சங்கமம்' என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டிச.16 - ல் சபரிமலை தீர்ப்பு குறித்துஆலோசனை
x
சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து ஆலோசிப்பதற்காக, சென்னையில், 'அய்யப்ப குருசாமிகள் சங்கமம்' என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி மகளிர் கல்லூரியில் வரும் 16-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில், சபரிமலை அய்யப்பன் கோயிலின் தலைமை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, ஸ்ரீபீடத்தின் நிறுவனர் பரிபூர்ணானந்த சரஸ்வதி சுவாமிகள், பந்தளம் அரண்மனை ஒருங்கிணைப்பு குழு தலைவர் சசிகுமார் வர்மா, 'துக்ளக்' ஆசிரியர் குருமூர்த்தி உள்ளிட்டோர் உரையாற்ற உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் திரளாக பங்கேற்குமாறு அய்யப்ப பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்