சுடுகாட்டில் வீசி செல்லப்பட்ட ஆறு மாத பெண் குழந்தை மீட்பு

எடப்பாடி அருகே ஆறு மாத பெண் குழந்தை ஒன்று, சுடுகாட்டில் வீசிப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுடுகாட்டில் வீசி செல்லப்பட்ட ஆறு மாத பெண் குழந்தை மீட்பு
x
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள சிலுவம்பாளையம் என்ற கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் இன்று காலையில் குழந்தை ஒன்று, அழுத நிலையில் கிடந்துள்ளது. அப்போது அங்கே வந்த சிலர், குழந்தையைக் பார்த்து அதிர்ச்சியடைந்து, பூலாம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து குழந்தையை போலீசார், சித்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைத்தனர். சுடுகாட்டில் பெண் குழந்தையை வீசிச் சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்