கஜா புயலில் பாதிக்கப்பட்ட ஆடு ஒரே நேரத்தில் 5 குட்டிகளை ஈன்றது...

அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் ஆட்டு குட்டிகளை பார்த்து செல்கின்றனர்.
கஜா புயலில் பாதிக்கப்பட்ட ஆடு ஒரே நேரத்தில் 5 குட்டிகளை ஈன்றது...
x
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே  நல்லூரை சேர்ந்த ரெங்கசாமி என்பவருக்கு சொந்தமான ஆடு ஒரே நேரத்தில் 5 குட்டிகளை ஈன்றுள்ளது. கஜா புயலின் போது குடிசை  சரிந்து விழுந்ததில் அந்த ஆடு சிக்கி கொண்டது.  இதனால் அதன் வயிற்றில் இருந்த குட்டிகளுக்கு என்ன ஆகுமோ என ரெங்கசாமி கவலை கொண்டார். ஆனால் அந்த ஆடு நல்லபடியாக 5 குட்டிகளை ஈன்றது. அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் ஆட்டு குட்டிகளை பார்த்து செல்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்