புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் பாஸ்கரன் ஆறுதல் - கைகொடுத்து வழியனுப்பிய விவசாயி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் பாஸ்கரன், பாராளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் பார்வையிட்டனர்.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் பாஸ்கரன் ஆறுதல் - கைகொடுத்து வழியனுப்பிய விவசாயி
x
புதுக்கோட்டை  மாவட்டம் அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை, கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் மற்றும் சிவகங்கை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினர். பின்னர் அமைச்சர் சென்ற காரை வழிமறித்த சிவசாமி என்னும் விவசாயி, பாதிக்கப்பட்டுள்ள தங்கள் பகுதிக்கு அடிப்படை பிரச்சினைகளை சரி செய்ய கோரி முறையிட்டார். உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவதாக அமைச்சர் தெரிவித்த பின், அவருக்கு
கைகொடுத்து விவசாயி சிவசாமி வழியனுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்