சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ரூ. 7 கோடி செலவில் பழங்குடியின அருங்காட்சியகம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 7 கோடி ரூபாய் செலவில் பழங்குடியினர் அருங்காட்சியகம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ரூ. 7 கோடி செலவில் பழங்குடியின அருங்காட்சியகம்
x
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 7 கோடி ரூபாய் செலவில் பழங்குடியினர் அருங்காட்சியகம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், கருப்பணண் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், வேட்டை தடுப்பு காவலர்களுக்கு 6 ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  வனக்காப்பாளர்களுக்கு வனவர் பதவி உயர்வு வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். பவானி சாகரிலிருந்து தெங்குமரஹாடா செல்லும் வனச்சாலை சீரமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்