கைவினை பொருட்கள் கண்காட்சியில் நம்பிக்கையுடன் பங்கேற்ற மாற்று திறனாளி மாணவர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாற்று திறனாளி மாணவர்கள் உருவாக்கிய கைவினை பொருட்களின் கண்காட்சி நடைபெற்றது.
கைவினை பொருட்கள் கண்காட்சியில் நம்பிக்கையுடன் பங்கேற்ற மாற்று திறனாளி மாணவர்கள்
x
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாற்று திறனாளி மாணவர்கள் உருவாக்கிய கைவினை பொருட்களின் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம்.வடநேரே தொடக்கி வைத்து மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டார். கண்காட்சியில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களால் உருவாக்கப்பட்ட அழகு சாதன பொருட்கள், உணவு பொருட்கள், கைவினை பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. நிகழ்ச்சியில், தங்களது  லட்சியத்தை அடைய முடியும் என நம்பிக்கையுடன் மாற்று திறனாளி மாணவர்கள் கூறிய காட்சி அங்கு கூடி இருந்தவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. 

Next Story

மேலும் செய்திகள்