டெல்லியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - 2 பேர் கைது...
குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்காட மாட்டோம் என கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானம்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, டெல்லியில் இருந்து வங்கி பயிற்சிக்காக கும்பகோணம் வந்த இளம்பெண்ணுக்கு, ஆட்டோ ஓட்டுனர் மற்றும் நான்கு இளைஞர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதனையடுத்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் பாலியல் தொந்தரவு செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்காடுவது இல்லை என்று கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
Next Story