பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த காதல் ஜோடி காவல் ஆணையர் அலுவலகத்தில் தஞ்சம்

கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் இளம் காதல் ஜோடி, பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளது.
பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த காதல் ஜோடி காவல் ஆணையர் அலுவலகத்தில் தஞ்சம்
x
கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில், இளம் காதல் ஜோடி, பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வசந்த குமார், ரம்யா இருவரும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், சாதியை காரணம் காட்டி, வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, கோவை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்த இருவரும், பாதுகாப்பு கோரி மனு அளித்தனர். அதில், தங்கள் வீட்டில் இருந்து இருவருக்கும் மிரட்டல் வருவதாகவும் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்