விஷப்பாம்பை விளையாட்டாக கையில் பிடித்த பெயின்டர் கவலைக்கிடம்

பூந்தமல்லியில் 8 அடி நீள விஷப்பாம்பை விளையாட்டாக கையில் பிடித்த பெயிண்டரை அந்த பாம்பு கொத்தியதால் அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விஷப்பாம்பை விளையாட்டாக கையில் பிடித்த பெயின்டர் கவலைக்கிடம்
x
பூந்தமல்லியில் 8 அடி நீள விஷப்பாம்பை விளையாட்டாக கையில் பிடித்த பெயிண்டரை அந்த பாம்பு கொத்தியதால் அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராமர் என்பவர் வண்டலூர்- மீஞ்சூர் தேசிய நெடுஞ்சாலையோரம் பூந்தமல்லியில் உள்ள சுவர்களில் பெயிண்டிங் செய்து கொண்டிருந்தார். 

அப்போது சாலையில் 8 அடி நீள விஷப்பாம்பு சென்றதை பார்த்த ராமர் அதனை கையில் பிடிக்க முற்பட்டார். கைகளால் பிடித்த அடுத்த நொடியே அந்த பாம்பு அவரை கடித்தது. இதனால் ஆத்திரமடைந்த ராமர் அந்த பாம்பை சுவற்றில் அடித்து கொன்றார். சிறிது நேரத்தில் ராமரும் மயக்கமடைந்தார். 

Next Story

மேலும் செய்திகள்