கரலாக்கட்டை குறித்த விழிப்புணர்வு பேரணி...

கரலாக்கட்டை பயன்படுத்துவதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி புதுச்சேரியில் நடைபெற்றது.
கரலாக்கட்டை குறித்த விழிப்புணர்வு பேரணி...
x
புதுச்சேரியில், கரலாக்கட்டை பயன்படுத்துவதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. புதுச்சேரியை சேர்ந்த கரலாக்கட்டை பயிற்சியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு விழிப்புணர்வு பேரணியை மேற்கொண்டனர். புதுச்சேரி காந்தி சிலையில் இருந்து புறப்பட்ட இந்தப் பேரணி 8 நாட்கள் பயணம் செய்து தமிழகப் பகுதிகள் வழியாக  திருவனந்தபுரம் வரை சென்று,  மீண்டும் தமிழகத்தின் பல்வேறு நகரங்கள் வழியாக  புதுச்சேரியில் நிறைவடைகிறது. இந்த குழுவினர் புதுச்சேரி காந்தி சிலையில் இருந்து கடலூர் வந்தடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்