விளை நிலத்தில் குட்டியுடன் நுழைந்த காட்டு யானைகள்...

குன்னூர் அருகே, விளை நிலங்களில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன
விளை நிலத்தில் குட்டியுடன் நுழைந்த காட்டு யானைகள்...
x
குன்னூர் அருகே, விளை நிலங்களில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள தூதூர் மட்டம், மஞ்சக் கம்பை, மேலூர் ஒசட்டி, ஒடயரட்டி, கெரடாலீ்ஸ், டெரேமியா உள்ளிட்ட பகுதிகளில் குட்டியுடன் நான்கு காட்டு யானைகள் புகுந்துள்ளன. தேயிலை உள்ளிட்ட பயிர்களை அவை நாசப்படுத்தியதால், விவசாயிகளுக்கு 15 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். காட்டு யானைகள் தொடர்ந்து, முகாமிட்டிருப்பதால், அவற்றை விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்