கிராம‌ப்புற பெட்டிக்கடைகளுக்கு குறி வைத்து கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட இளைஞர்

வேலூர் ஆம்பூர் அருகே கிராம‌ப்புற பெட்டிக்கடைகளை குறி வைத்து கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கிராம‌ப்புற பெட்டிக்கடைகளுக்கு குறி வைத்து கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட இளைஞர்
x
வேலூர் ஆம்பூர் அருகே கிராம‌ப்புற பெட்டிக்கடைகளை குறி வைத்து கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். சென்னை மூலக்கடை பகுதியை சேர்ந்த சதாம் உசேன் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தினமும் ஆயிரம் ரூபாய் கூலி பெற்றுக்கொண்டு கிராம புற பெட்டிக்கடைகளில் இதுபோன்று போலியான ரூபாய் நோட்டுகளை   புழக்கத்தில் விட்டு வந்துள்ளார். இந்நிலையில் ஆம்பூர் அருகே ஆலங்குப்பம் என்ற பகுதியில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட முயற்சித்த அவரை, கடை உரிமையாளர் மற்றும் பொதுமக்கள்  பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  


Next Story

மேலும் செய்திகள்