ஒரு வாரத்திற்குள் 100 சதவீத மின் இணைப்பு சரி செய்யப்படும் - அமைச்சர் தங்கமணி
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு வாரத்திற்குள் 100 சதவீத மின் இணைப்பு சரி செய்யப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் புயல் சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வீரையன் என்பவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மின் துறை அமைச்சர் தங்கமணியும், வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவும் வீரையனை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு வாரத்திற்குள் 100 சதவீத மின் இணைப்பு சரி செய்யப்படும் என்றார்.. மின் இணைப்பு சரி செய்ய பட்ட பின்னரே
டெல்டா மாவட்டங்களை விட்டு செல்வோம் எனவும் தங்கமணி தெரிவித்தார்.
Next Story