மருத்துவரை கடத்த முயற்சி : கடத்தல்காரனை விரட்டிப்பிடித்த பொதுமக்கள்
சென்னை சாலிகிராமத்தில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வந்த மூன்று நபர்கள் மருத்துவர் ஒருவரை கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை சாலிகிராமத்தில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வந்த மூன்று நபர்கள் மருத்துவர் ஒருவரை கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவர் கார்த்திகேயனின் கூச்சலை கேட்டு அங்கு திரண்ட பொதுமக்கள், கடத்தல்காரர்களை விரட்டி பிடித்தனர். ஒருவன் மக்கள் பிடியில் சிக்கிய நிலையில், எஞ்சிய 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட லோகபிரான் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். தப்பிய ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story