துக்கப்பட்டாலோ எலும்பு முறியும் : விநோத நோயால் அவதிப்படும் பள்ளி மாணவி

வீட்டில் முடங்கிக் கிடக்கும் பரிதாபம் - பெற்றோர் வேதனை
x
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சின்னஎலசகிரி பகுதியைச் சேர்ந்த பூபதி-கிரிஜா தம்பதியின் ஒரே மகள் தீபிகா. ஒசூரிலுள்ள தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி தீபிகாவிற்கு பிறந்ததில் இருந்தே எலும்பு சம்பந்தமான நோய் உள்ளது. இந்நிலையில் தீபிகா வளரும் பருவத்தில் அவர் அதிகமாக சிரித்தாலோ, துக்கப்பட்டாலோ எலும்புகள் உடைந்து போகும் நிலை ஏற்பட்டது.  மருத்துவ பரிசோதனையில் அவருக்கு, "ஆஸ்டியோ ஜெனிசிஸ் இம்பர்பெக்டா" என்ற விநோத நோய் இருப்பது தெரிந்தது.இதையடுத்து, 7 முறை எலும்புகள் உடைந்ததால் அந்த மாணவிக்கு, தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் தீபிகா பள்ளிக்கு செல்ல  முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார். அவரைக் காப்பாற்ற தமிழகஅரசு உதவவேண்டும் என மாணவியின் பெற்றோர் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்