ரூ.1 நோட்டை சிறப்பிக்க சிறப்பு அஞ்சல் உறை

நூற்றாண்டுகளைக் கடந்த ஒரு ரூபாய் பணத் தாளுக்கு சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது.
ரூ.1 நோட்டை சிறப்பிக்க சிறப்பு அஞ்சல் உறை
x
திருச்சி பணத்தாள் சேகரிப்போர் சங்கம் மற்றும் இந்திய அஞ்சல் துறை சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், மத்திய மண்டல அஞ்சல்துறை தலைவர் அம்பேஷ் உப்மண்யு மற்றும் தேசிய தொழில்நுட்பக் கல்லூரி இயக்குனர் மினிஷாஜி தாமஸ் ஆகியோர் அஞ்சல் உறையை வெளியிட்டனர். இதனை தொடர்ந்து போட்டி ஒன்றில், சிறப்பாக, அஞ்சல் தலைகளை வடிவமைத்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பேசிய, மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் அம்பேஷ் உப்மண்யு, மாணவ மாணவிகள் பொழுது போக்காக அஞ்சல்தலை சேகரிக்க வேண்டும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்