டெல்லியில் குவிந்த தமிழக விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டம்
விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும் - பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில் விவசாயிகள் மாபெரும் பேரணி நடத்தினர்.
விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும் - பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில் விவசாயிகள் மாபெரும் பேரணி நடத்தினர். கையில் செங்கொடி ஏந்தி, முழக்கம் எழுப்பிய படி, விவசாயிகள், ஊர்வலமாக அணிவகுத்து வந்தனர். நாடு முழுவதும் இருந்து சுமார் ஒரு லட்சம் விவசாயிகள், தலைநகரில் குவிந்துள்ளனர். இதனிடையே, டெல்லியில் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்ற ரெயில் மறியல் போராட்டத்தில், தமிழக விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story