நிவாரண முகாமில் தங்கிருந்த பெண் உயிரிழப்பு
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே நிவாரண முகாமில் தங்கிருந்த பெண் போதிய அடிப்படை வசதிகள் இன்றி உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே நிவாரண முகாமில் தங்கிருந்த பெண் போதிய அடிப்படை வசதிகள் இன்றி உயிரிழந்தார். கோமளபேட்டை பகுதியைச் சேர்ந்த வேதநாயகி என்ற பெண் கடந்த 12 நாட்களுக்கு முன்பு கஜா புயலால் பாதிக்கப்பட்டு, அரசின் நிவாரண முகாம்களில் தங்கிருந்தார். இதில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக்குறைவால் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story