பொறியியல் மாணவர்களுக்கு பாடம் எடுத்த 7 ஆம் வகுப்பு மாணவன்

ஐதராபாத்தை சேர்ந்த 7 ஆம் வகுப்பு மாணவன் சென்னையை அடுத்த வண்டலூரில் தனியார் கல்லூரியில் பொறியியல் மேற்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தி அசத்தியுள்ளார்.
x
ஹைதராபாத்தை சேர்ந்த 7 ஆம் வகுப்பு மாணவன், சிறு வயதிலேயே, கணினி வரைபடக்கலை, மற்றும் தொழிற்நுட்பங்களில், சிறந்து விளங்குகிறார். பல்வேறு நாடுகளை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ஹைதராபாத்தில் இலவசமாக பாடம் எடுத்து வந்த முகமது அசன், தற்போது சென்னைக்கு வந்து, தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக பாடம் எடுத்து வருவதை பாராட்டி, அமெரிக்க அரசு பாட்னாவில் வருகிற டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி, காலா என்ற விருதினை வழங்குவதாகவும், அதனை இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த வழங்க உள்ளதாகவும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்