சேலம் நீதிமன்ற வளாகத்தில் சொத்து தகராறு காரணமாக அண்ணன் தம்பி மகன்கள் சண்டை
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சாமி நாய்க்கன் பட்டி பகுதியை சேர்ந்த சகோதர்கள் தங்கவேல் அய்யனார் மற்றும் பரமேஸ்வரன் மூவரும் நிலத்தகராறு தொடர்பான வழக்கு விசாரணைக்காக தங்கள் மகன்களுடன் சேலம் நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சாமி நாய்க்கன் பட்டி பகுதியை சேர்ந்த சகோதர்கள் தங்கவேல், அய்யனார் மற்றும் பரமேஸ்வரன் மூவரும் நிலத்தகராறு தொடர்பான வழக்கு விசாரணைக்காக தங்கள் மகன்களுடன் சேலம் நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர். வழக்கு விசாரணை வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற வளாகத்தில் தங்கவேல் மற்றும் ஐயனார் ஆகியோரின் மகன்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் காயம் அடைந்தவர்களை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பின்னர், இரு தரப்பினரையும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
Next Story