"ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக சட்டசபையிலேயே போராட்டம் நடத்தப்படும்"- பழனி சட்டமன்ற உறுப்பினர் பேச்சு

பழனி அடிவாரத்தில் உள்ள கிரிவல வீதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் வாழ்வாதாரத்தை அழித்து வருவதாக சிறு வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக சட்டசபையிலேயே போராட்டம் நடத்தப்படும்- பழனி சட்டமன்ற உறுப்பினர் பேச்சு
x
பழனி அடிவாரத்தில் உள்ள கிரிவல வீதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் வாழ்வாதாரத்தை அழித்து வருவதாக சிறு வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தேவைப்பட்டால் சட்டப் பேரவையில் போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளதாக பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். பழனியில் திமுக சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்ற‌ தொகுதிக்கு உட்பட்ட பழனி சட்டமன்ற தொகுதிக்கான நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செந்தில்குமார் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்