இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் : அரசாணை நகலை எரித்து, எதிர்ப்பு

சம்பள முரண்பாட்டை களைய வலியுறுத்தி, சென்னை - சேப்பாக்கம் அரசு விருந்தினர் விடுதி அருகே கூடிய இடை நிலை ஆசிரியர்கள், அரசாணையின் நகலை எரித்து, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் : அரசாணை நகலை எரித்து, எதிர்ப்பு
x
* சம்பள  முரண்பாட்டை களைய வலியுறுத்தி, சென்னை - சேப்பாக்கம் அரசு விருந்தினர் விடுதி அருகே கூடிய இடை நிலை ஆசிரியர்கள், அரசாணையின் நகலை எரித்து, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

* இதேபோல, மதுரையில் நடைபெற்ற அரசாணை எரிப்பு போராட்டத்தில் பங்கேற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள்,  மத்திய அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக தமிழ்நாடு அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கும்  சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

* சேலத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, முழக்கம் எழுப்பினர்.

* இதேபோல, நெல்லையில், இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை களைய வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்குழுவினர், முடிவில் அரசாணை நகலை எரித்து, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதுதவிர, தமிழகம் முழுவதும் இடை நிலை ஆசிரியர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்