சென்னை புழல் அருகே மூட்டை மூட்டையாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள்

சென்னை புழல் ஏரி அருகே 25 மூட்டைகளில் கட்டுக்கட்டாக வைக்கப்பட்டிருந்த செல்லாத 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்
x
புழல் ஏரி அருகே 25 மூட்டைகள் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு விரைந்த போலீசார், மூட்டைகளை கைப்பற்றினர். அதை திறந்து பார்த்த போது, கட்டுக்கட்டாக செல்லாத 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. அவை மதிப்பிட முடியாத அளவுக்கு துண்டு துண்டாக வெட்டப்பட்டிருந்தன. செல்லாத பழைய 500 ரூபாய் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அடங்கிய மூட்டைகளை ஏரியில் வீசி சென்றவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்