வண்ணங்களில் மிளிரும் தண்டவாளங்கள் : பயணிகளை கவர்ந்த ரயில்வே நிர்வாகம்

சென்னையில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற வர்ணங்கள் பூசப்பட்ட தண்டவாளங்கள் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
வண்ணங்களில் மிளிரும் தண்டவாளங்கள் : பயணிகளை கவர்ந்த ரயில்வே நிர்வாகம்
x
நாட்டில் முதன்முறையாக வடக்கு மண்டல இரயில்வேக்குட்பட்ட தண்டவாளங்களில் வண்ணம் பூசி பராமரிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அது பயணிகளை வெகுவாக கவர்ந்ததால் பிற ரயில்வே மண்டலங்களிலும் நடைமுறைபடுத்தப்பட்டது. தெற்கு ரயில்வேக்குட்பட்ட சென்னையில் முதல் கட்டமாக கோடம்பாக்கம், பரங்கிமலை ஆகிய ரயில் நிலையங்களில் உள்ள தண்டவாளங்களில் சிவப்பு, வெள்ளை நிற வர்ணங்கள் பூசப்பட்டுள்ளது. இது பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.  மற்ற ரயில் நிலையங்களிலும் விரைவில் இம்முறை நடைமுறைப்படுத்த உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்