தந்தி டி.வி செய்தி எதிரெலி : விழுப்புரம்-செஞ்சி புறவழிச்சாலையில் மிளிரும் விளக்குகள்

தந்தி டி.வி.யின் செய்தி எதிரெலியால், விழுப்புரம்- செஞ்சி புறவழிச்சாலையில் காவல்துறை சார்பில் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் மிளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
x
விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளால் மரண பயத்துடன் சாலையை கடக்கும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பற்றி ஒரு சிறப்பு செய்தித் தொகுப்பு, கடந்த 12ஆம் தேதி தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதில் விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதியாக கண்டறியப்பட்ட விழுப்புரம்- செஞ்சி புறவழிச்சாலை, விழுப்புரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் எல்லீஸ்சத்திரம் பை பாஸ் சாலை ஆகிய 2 இடங்களில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து, விழுப்புரம்- செஞ்சி புறவழிச்சாலையில் காவல்துறை சார்பில் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில்  மிளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டன. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இயக்கி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்