புயல் சீரமைப்பு பணி: ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு : மக்களிடம் குறைகள் கேட்டார், துணை முதல்வர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் சீரமைப்பு பணிகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.
புயல் சீரமைப்பு பணி: ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு : மக்களிடம் குறைகள் கேட்டார், துணை முதல்வர்
x
* புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் சீரமைப்பு பணிகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். களமாவூர் என்ற இடத்தில், மின்கம்பங்கள் சீரமைக்கும் பணியை பார்வையிட்ட அவர், அங்கு டேங்கர் லாரியில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். 

* தொடர்ந்து கீரனூர் மற்றும் புதுக்கோட்டை பகுதிகளை ஆய்வு செய்த, ஓ.பன்னீர்செல்வம், இரவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த ஆய்வுப் பணியின் போது, அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்