ஆசிரியர் பணியிட மாறுதலில் ஊழல் : விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழக அரசுப் பள்ளிகளில், ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்குவதில் பெரும் ஊழல் நடந்து வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆசிரியர் பணியிட மாறுதலில் ஊழல் : விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தல்
x
தமிழக அரசுப் பள்ளிகளில், ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்குவதில் பெரும் ஊழல் நடந்து வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில், ஆயிரத்திற்கும் கூடுதலான ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒரு மாறுதலுக்கு 7 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகவும் புகார் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து ஆளுநர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்