மேம்பால தடுப்புக் கட்டையில் கார் மோதி விபத்து : ஓட்டுநர் உட்பட 4 பேர் பலியான பரிதாபம்

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே வந்த போது அந்த பகுதியில் உள்ள ரயில்வே மேம்பால தடுப்பு சுவற்றில் கட்டுப்பாட்டை இழந்து கார் மோதியது.
மேம்பால தடுப்புக் கட்டையில் கார் மோதி விபத்து : ஓட்டுநர் உட்பட 4 பேர் பலியான பரிதாபம்
x
காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் பகுதியில் வசித்து வந்தவர் தேவநாதன்.  மனைவி, மகள் உள்ளிட்டோருடன் ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு காரில் சென்றுள்ளார். காரை கல்பாக்கத்தை சேர்ந்த ஓட்டுநர் பவுல் ரஹ்மான் என்பவர் ஓட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே வந்த போது அந்த பகுதியில் உள்ள ரயில்வே மேம்பால தடுப்பு சுவற்றில் கட்டுப்பாட்டை இழந்து கார் மோதியது. இதில் காரில் பயணம் செய்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்து குறித்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்